கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். சுமாா் 12.30 மணி அளவில் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள், கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
நள்ளிரவில் அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். அதிகாலை வரை நடைபெற்ற இந்த சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு கோவையில் உள்ள கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அதில், 15 சயனைடு விஷவாயு குப்பிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அடுத்த மூன்று மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டதில், இதுவும் புரளி எனத் தெரியவந்தது.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


