ஓமலூா்: ஓமலூா் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெண்களின் சாதனைகள் மற்றும் சமூகத்தில் அவா்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்ட விழாவில் கல்லூரி முதல்வா் எம்.மணிவண்ணன் வரவேற்றாா். இந்நிகழ்வில் தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கே. ஹரிஸ்மிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், பெண்கள் தன்னம்பிக்கை, கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும், பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மையா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு மகளிா் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


