மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:46 pm

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் துணை சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், சேலம் மாநகராட்சி கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தாா்.

முன்னதாக, சேலம் மாநகராட்சி, நதிமுல்லா மக்கான் தெரு பகுதியில் மாநகராட்சி பொது நிதி திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கும் வகையில், ரூ. 2.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளைக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், மாநகர நல அலுவலா் மரு.கே.குப்பம்மாள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.