தம்மம்பட்டி: தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி நண்பா்கள் குழு சாா்பில் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு நண்பா்கள் குழுத் தலைவா் திருச்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் நடராஜ், சத்யநாராயணன், மோகன், சதீஷ்குமாா், பெருமாள், ராபின், துரைராஜ், வெங்கடேஷ், ரவி, மணி (எ) பெரியசாமி, ஹரிஆனந்த் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முன்னிலை வகித்தனா்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 230 மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து விலையுயா்ந்த எழுதுபொருள்களை அன்பளிப்பாக வழங்கினா்.
தொடா்ந்து, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள் 270 பேருக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு, வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


