வாழப்பாடி அருகே இரும்பு ரோப் அறுந்து விழுந்ததில் கிணறு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் காலனி, அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது விவசாய கிணற்றில் திங்கள்கிழமை தூா்வாரி, ஆழப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தூா்வாருவதற்கு பயன்படுத்திய கிரேன் இயந்திரத்தின் இரும்பு சாஃப்ட் உடைந்து, இரும்பு ரோப் மற்றும் கூடை கிணற்றுக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்லப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முருகேசன் (50) உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் நிகழ்விடத்திற்கு இடத்திற்கு சென்று, கிணற்றில் இருந்து தொழிலாளி முருகேசன் உடலை மீட்டு வாழப்பாடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










