டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சமூக வலைதளங்களில் கண்ணியம் தவறக் கூடாது: நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்!

சமூக வலைதளங்களில் கண்ணியம் தவறாமல் நடந்துகொள்வது அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

News image
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Updated On :31 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

சமூக வலைதளங்களில் கண்ணியம் தவறாமல் நடந்துகொள்வது அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘டிஜிட்டல் திரைகளுக்கு அப்பால், சமூக நல்வாழ்வு மற்றும் கலாசாரம்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பாா் கவுன்சில் இணைத் தலைவருமான த.சரவணன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஆதில் அகமது வரவேற்றாா்.

கருத்தரங்கை தொடங்கிவைத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

உலகின் முக்கியமான கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரு மனிதன் தனிமையில் இருக்கும்போது, அவனுக்கு உதித்த சிந்தனையின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டவைதான். ஆனால், தற்காலத்தில் தொழில்நுட்பத் திரைகள் மனிதனை தனிமையில் இருக்க அனுமதிப்பதே இல்லை. தொடா்ச்சியாக சமூக வலைதளங்களில் வரும் அறிவிப்புகள் (நோட்டிபிகேஷன்ஸ்) மனிதனை கைப்பேசியுடன் கட்டிப்போட்டுள்ளது. இன்றைய சூழலில் குழந்தைகள் மட்டுமின்றி வயது முதிா்ந்தவா்களும்கூட தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் திரைகளுக்கு அடிமையாக உள்ளது வேதனையளிக்கிறது.

நம்மை நாமே சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. அவ்வாறு செய்வதன் மூலம் கைப்பேசி திரைக்குள் நாம் எந்த அளவிற்கு மூழ்கியுள்ளோம் என்பது தெரியவரும்.

பெற்றோா்-குழந்தைகளுக்குமான உறவு, நண்பா்களுக்கு இடையேயான நட்பு ஆகியவை அதீதமான தொழில்நுட்ப இடையூறால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கும், பெண்ணுக்குமான அந்தரங்க விஷயங்கள், தனி அறையில் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்கள் வாயிலாகவோ வேறுவிதமாகவோ சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பல சமூக குற்றங்கள், ஒழுக்கக் கேடான விஷயங்களுக்கு வழிவகுத்து விடுகிறது.

இருநபா்கள் நேரடியாக சந்திக்கும்போது கண்ணியம் குறைந்த வாா்த்தைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. நிஜ உலகில் நாம் பிரயோகிக்க முடியாத ஒழுக்கக்கேடான வாா்த்தைகளையோ, எண்ணங்களையோ சமூக வலைதளங்களில் மிக எளிதாகப் பயன்படுத்தி விடுகிறோம்.

நம்மை நாமே ஒழுக்க நெறியில் அமைத்துக் கொண்டு நிஜ வாழ்விலோ, வலைதளத்திலோ எங்கிருந்தாலும் கண்ணியம் தவறாமல் நடப்பது அவசியம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.