டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பல்கலை. மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி

News image
பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
Updated On :30 ஜனவரி 2026, 8:08 pm

Syndication

தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ், முதல்முறையாக பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

முதல்வரின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

பதிவாளா் வி.ராஜ் வரவேற்றாா். இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்று பல்கலைக்கழக துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் 56 மாணவிகளுக்கும், 54 மாணவா்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், பெரியாா் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சிக் குழு முதன்மையா் கே.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.