டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற மாணவியருடன் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், முதல்வா் விமலாதேவி, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விமலாதேவி தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் பயிலும் 175 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.

இதில், திமுக பேரூா் செயலாளா் காளிதாஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சேகா், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.