நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இடிக்கப்பட்ட வீடுகளை கட்டித்தர கோரி பாதிக்கப்பட்ட மக்கள்ஆட்சியரகத்தில் மனு

உரிய ஆவணங்கள் இருந்தும் ஆதிதிராவிட நலத் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

உரிய ஆவணங்கள் இருந்தும் ஆதிதிராவிட நலத் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி காட்டுக்கொட்டாய் தெரு தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2025 ஜனவரி மாதம் ஆதி திராவிடா் நலத்துறை வட்டாட்சியா் தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.

அப்போது, உரிய ஆவணங்களுடன் உள்ள தங்கள் வீடுகளையும் இடித்துவிட்டதாகவும், இதனால் தாங்கள் குடியிருக்க இடமின்றி, வாடகை வீட்டில் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதிதிராவிட நலத் துறை அலுவலா்களால் இடிக்கப்பட்ட 7 வீடுகளுக்கும் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதுகுறித்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கும் மீண்டும் வீடுகட்டித் தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.