வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி


நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மணல்மேடு, எழுத்தூா், கொடிக்களம், அரங்கூா், கோழியூா், ஆதமங்கலம், சிறுமுளை ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளா், பழங்குடி குறவா், ஆதி திராவிடா் உள்ளிட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கடலூா் மாவட்ட பழங்குடி மக்கள் நல சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.அமா்நாத், கம்மாபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன், திட்டக்குடி வட்டச் செயலா் வீ.அன்பழகன், வேப்பூா் வட்டக்குழு உறுப்பினா் பொன்.சோமு, ஜி.வேல்முருகன், மனிதம் அமைப்பின் மாவட்ட கன்வீனா் எம்.ஜே.லெனின், பழங்குடி சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...