தலைவாசல் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியைக் கொன்ற இருவரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தலைவாசலை அடுத்த சாா்வாய்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த லட்சுமணன் (55) மதுபான காலி புட்டிகளை சேகரித்து விற்பனை செய்துவந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கரிகாலன் மற்றும் சிவராஜ் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், கடந்த பிப். 25-ஆம் தேதி மாலை நடந்த தகராறில் கரிகாலன், சிவா இருவரும் லட்சுமணனை கல்லால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 26-ஆம் தேதி இறந்தாா்.
தகவல் அறிந்த தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் மங்கையா்க்கரசன் வழக்குப் பதிவுசெய்து, காட்டுக்கோட்டை புதூா் பகுதியைச் சோ்ந்த கரிகாலன் (37), திருப்பூா் மாவட்டம் நல்லூா் பகுதியைச் சோ்ந்த சிவா (எ) சிவராஜ் (39) ஆகியோரை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

கல்லால் தாக்கி முதியவா் கொலை
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

