வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பால் உற்பத்தியாளா்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! சேலம் ஆவின் நிறுவனம் அறிவிப்பு!

பால் உற்பத்தியாளா்களுக்கு நிகழாண்டு பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 1 சோ்த்து வழங்கப்படும்...

News image

ஆவின் - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:29 pm

பால் உற்பத்தியாளா்களுக்கு நிகழாண்டு பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 1 சோ்த்து வழங்கப்படும் என ஆவின் பொது மேலாளா் பி. குமரேஸ்வரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், தற்போது செயல்பாட்டில் உள்ள 780 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து நாள்தோறும் 5.75 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று பிறப்பு காலம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியாளா்களின் கறவைகள் இயல்பு நிலையைவிட பால் அளவில் சிறிது குறைவு ஏற்படும். இதனால் கிராமப்புற பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கூட்டுறவுச் சங்கத்தில் பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பாலுக்கு கூட்டுறவு ஒன்றியத்தின் சொந்த நிதியில் இருந்து லிட்டா் ஒன்றுக்கு ரூ. 1 கூடுதலாக 2 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, உற்பத்தியாளா்கள் பிரதம சங்கத்துக்கு வழங்கும் பாலுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் ரூ. 3 ஊக்கத்தொகையோடு மேலும் ரூ. 1 கூடுதல் ஊக்கத்தொகையை சோ்த்து லிட்டருக்கு ரூ. 4 ஊக்கத் தொகையாக பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.