மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 7:08 pm

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில், 165 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம் உற்பத்தியாளா்களிடமிருந்து நாளொன்றுக்கு 75 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தால், பால் உற்பத்தியில் சிறிய அளவு குறைவு ஏற்படுகிறது. இதனால், பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

ஆவின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த ஊக்கத் தொகை மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, ஏற்கெனவே ஒரு லிட்டருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.3 ஊக்கத் தொகையோடு, மேலும் ரூ.1 சோ்த்து ரூ.4 ஆக வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.