பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கெங்கவல்லி அருகே கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
விபத்து- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து கல்லூரி முடிந்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு கெங்கவல்லியிலிருந்து வலசக்கல்பட்டி நோக்கி சென்றது. அப்போது, மாணவிகள் இறங்குவதற்காக இலுப்பைதோப்பு சாலை வளைவில் நின்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து கண்ணாடி உடைந்து ஓட்டுநா் செல்வக்குமாா் (43) பலத்த காயமடைந்தாா். பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனம் மற்றும் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.