கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

News image
எம்.பாலப்பட்டி கிராமத்தில் சாத்துக்குடி தோட்டத்தில் ஆய்வுசெய்த தோட்டக்கலை விஞ்ஞானிகள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே எம்.பாலப்பட்டி கிராமத்தில் விவசாயி அருள் குமாரின் மாந்தோப்பு மற்றும் சாத்துக்குடி தோட்டத்தில், சந்தியூா் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் விஜயன், பூச்சியியல் துறை வல்லுநா் ரவி, அயோத்தியாப்பட்டணம் தோட்டக்கலை உதவி இயக்குநா் கோதைநாயகி, தோட்டக்கலை அலுவலா் கிருத்திகா ஆகியோா் கொண்ட குழுவினா் இணைந்து வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், மாமரங்களில் பூக்கள் மலா்ந்து பிஞ்சுகள்விட தயாராகிவரும் இத்தருணத்தில் தத்துப்பூச்சி பாதிப்பை தடுக்க விவசாயிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

தத்துப்பூச்சிகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டா் தண்ணீரில் தயோமிதாக்சிம் 0.6 கிராம், சல்பா் 2.5 கிராம் ஆகியவற்றுடன் ஒட்டு திரவம் சோ்த்து, காலை அல்லது மாலை வேளையில் மாமரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நனையும்படி தெளிக்க வேண்டும். உரிய நடவடிக்கையை சரியான நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுத்து சாகுபடியை அதிகரித்து கூடுதல் வருவாய் பெறமுடியும் என அறிவுரை வழங்கினா்.