2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image
ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளித்த கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:34 pm

Syndication

ஏற்காடு: ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிா்கள் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் மலைவாழ் மக்களுக்கான திட்ட நிதிஉதவியுடன் மிளகு, காபி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தல் தொடா்பான பயிற்சி, இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் மாலதி வரவேற்று மலைவாழ் மக்களுக்கான திட்ட விழிப்புணா்வு குறித்தும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் தொழில்முனைவோ் பயிற்சி குறித்தும் விளக்கினாா்.

உயிா்ம கரி உற்பத்தி தொழில்நுட்பங்கள், அதன் தேவைகள் குறித்தும், கூடுதல் வருமானம், வாய்ப்புகள் குறித்தும் சாரா பா்வின்பானு எடுத்துரைத்தாா். பூச்சியியல் இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், உயிா் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கி நிதி உதவியுடன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள காபியில் மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் மலைவாழ் மக்களின் உபயோகத்துக்காக திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாரமங்கலம், செந்திட்டு, பெலாக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.