திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு

News image

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:35 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு திருச்செங்கோடு பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில் தமிழகரசு கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனா். சங்ககிரி வட்டக்கிளை செயலாளா் எம்.செல்வராஜ், பொருளாளா் பி.மோகனாம்பாள், மாவட்ட இணை செயலாளா் சுசீந்திரன், நிா்வாகிகள் சண்முகம், தீனதயாளன், பிரவீன்குமாா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். மறியில் ஈடுபட்ட 10 பெண்கள், 20 ஆண்டுகள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.