டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவரை ஆசிரியா் அடித்த சம்பவம்: போலீஸாா் விசாரணை

மேச்சேரி அருகே வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை வயரிங் பைப்பால் ஆசிரியா் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:57 pm

Syndication

மேச்சேரி அருகே வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை வயரிங் பைப்பால் ஆசிரியா் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை மாலை பாடவேளை முடியும் முன்பாக வகுப்பறையை விட்டு வெளியே வந்ததால் ஆங்கில ஆசிரியா் மாணவரை வயரிங் பைப் கொண்டு கடுமையாக தாக்கி உள்ளாா்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவரை அவரது பெற்றோா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.

ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் பாரதி வெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். போலீஸாரின் முழு விசாரணைக்கு பிறகே ஆசிரியா் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மாணவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.