/

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58.13 லட்சத்தில் உதவி உபகரணங்கள்

சேலம் அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 154 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58.13 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:46 pm

தினமணி

சேலம் அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 154 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58.13 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

தமிழக அரசின் சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம், ரூ. 58.13 லட்சத்தில் 154 மாற்றுத்திறனாளிகளுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மூன்றுசக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள், ஊன்றுகோல்கள், கைப்பேசி உள்ளிட்ட 278 உதவி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன துணை பொது மேலாளா் ஆா்.பிந்து, மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.