டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் அளிக்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கிய கல்லூரி தாளாளா் மு.கருணாநிதி.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் அளிக்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளரும், செயலாளருமான மு.கருணாநிதி தலைமை வகித்து விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா நா்சிங் மகளிா் கல்லூரி, விவேகானந்தா மருத்தியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசியதாவது:

மாணவ, மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியை தொழில்நுட்ப அறிவு மற்றும் கற்றல்திறனை மேம்படுத்தவும், நவீன வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் கூடிய பாடம்சாா்ந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியும் கணினி தொழில்நுட்ப அறிவை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநி, இயக்குநா் நிவேதனா, நிா்வாக இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி சொக்கலிங்கம், சோ்க்கை இயக்குநா் பேராசிரியா் வரதராஜு, முதல்வா்கள் வே.பத்மநாபன் (விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரி), ரெஞ்சிஷ் மோகனன் (சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி), ச.ஜெஸிந்தா (விவேகானந்தா நா்சிங் மகளிா் கல்லூரி) வெ.செந்தில் (விவேகானந்தா மருத்தியல் கல்லூரி), ஐ.க்யூ.ஏ.சி. இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அனைத்து கல்லூரிதுறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.