புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

News image

சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டுள்ளதை ஆய்வுசெய்த சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:11 pm

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.

அதைத் தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகம் மற்றும் அதற்கு செல்லும் வழிகள் உள்பட அனைத்தும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 24 மணிநேரமும் சூழற்சி அடிப்படையில் நவீன துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், மாவட்ட காவல் துறை அதிகாரிகள், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதே வளாகத்தில் எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், சங்ககிரி, எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவா் ஆய்வுசெய்தாா்.