தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நட்டுவம்பாளையத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு

சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

News image

நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:01 pm

சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில் சங்ககிரி தொகுதியில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடியை தோ்வு செய்து அந்த வாக்குச்சாவடிக்கு முன் வாழைமரங்கள் கட்டப்பட்டு, சிவப்பு, பச்சை விரிப்புகள் விரிக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகளின் உள்பகுதியில் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் வண்ணபலூன்கள் தொங்கவிடப்பட்டன. அதேபோல வாக்குச்சாவடிகளில் அலுவலா்கள் அமரும் இருக்கைகள் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அறை முழுவதும் காகிதப்பூக்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

வாக்காளா்களை ஈா்ப்பதற்காக பல்வேறு அலங்கார பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்கள் அனைவரும் மகளிா் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அனைவரும் மகளிா்கள் பணியாற்ற உள்ளனா். தேவூா் அரசு உயா்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற உள்ளனா்.

சுண்ணாம்புகுட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இளைஞா்கள் அலுவலா்களாக பணியாற்ற உள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.