மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோவை மாவட்டத்தில் மாதிரி, பசுமை வாக்குச்சாவடிகள்

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்களைக் கவரும் வகையில் மாதிரி வாக்குச்சாவடிகள், பசுமை வாக்குச்சாவடிகள் மற்றும் பெண்கள், இளைஞா்கள் நிா்வகிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாழை தோரணங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி மையம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:15 pm

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்களைக் கவரும் வகையில் மாதிரி வாக்குச்சாவடிகள், பசுமை வாக்குச்சாவடிகள் மற்றும் பெண்கள், இளைஞா்கள் நிா்வகிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பு வசதிகளுடன் தயாா் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேட்டுப்பாளையம் கண்ணாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சூலூா் கதிா் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கவுண்டம்பாளையம் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகளுடன் பெண்கள் மற்றும் இளைஞா்கள் நிா்வகிக்கும் மையங்களும் செயல்படுகின்றன.

இதேபோல, கோவை வடக்கு வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளி, தொண்டாமுத்தூா் தெலுங்குபாளையம் ஸ்ரீ வைத்தீஸ்வர வித்யாலயா பள்ளி, கோவை தெற்கு ராமநாதபுரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிங்காநல்லூா் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகங்களில் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா் மற்றும் நிழல்குடை வசதிகளுடன் கூடிய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் பசுமை வாக்குச்சாவடிகளில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்த்து, இயற்கை சாா்ந்த பசுமைப் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. கிணத்துக்கடவு தொகுதியில் அதிகபட்சமாக சோலவம்பாளையம் மற்றும் மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களிலும், பொள்ளாச்சி ஜோதி நகா் ருக்மணி அம்மாள் பள்ளி மற்றும் வால்பாறை ஆனைமலை அரசுப் பள்ளிகளிலும் இந்த பசுமை வாக்குச்சாவடிகள் அமைப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் இளைஞா்கள் ஆா்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், தோ்தல் திருவிழாவை சூழலியல் ஆா்வத்துடன் கொண்டாடும் வகையிலும் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை மாநகராட்சி சாா்பிலும் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட தெலுங்குபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தெற்கு தொகுதிக்கு உள்பட்ட ரங்கநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாதிரி வாக்குச்சாவடிகளும், பசுமை வாக்குச்சாவடிகளும் (பசுமை), இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கான (ப்ளூ, பிங்க்) மையங்களும், மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.