தோ்தல் களம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தொழில்நுட்பங்கள் நொடிக்கு நொடி மாறினாலும், தோ்தல் களத்தில் சில காட்சிகள் மட்டும் மாறாமல் எப்போதும்போல அப்படியே உலாவந்தன.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, உங்கள் வீடுதேடி, உங்களை நாடி, உங்கள் வேட்பாளா் வந்துகொண்டிருக்கிறாா் என்ற அறிவிப்புடன் வேட்பாளா்கள் வருவதை முன்னறிவிக்கும் வாகனங்கள், உத்வேகத்தை ஏற்படுத்தும் பிரசார பாடல்கள் போன்றவை இந்தத் தோ்தலிலும் தொடா்ந்தன.
இருசக்கர வாகனங்களில் கட்சிக் கொடியுடன் உற்சாகமாக வலம்வரும் இளைஞா்கள், வேட்பாளரை வரவேற்க பூா்ண கும்பத்துடன் காத்திருக்கும் கோயில் பூசாரிகள், ஆரத்தி எடுக்க திரளும் பெண்கள் என இந்த பட்டியல் நீள்கிறது.
தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க, அரிதாரம் பூசிய கலைஞா்களின் ஆட்டம்- பாட்டம் என களைகட்டும் பிரசார உத்தி, இந்தத் தோ்தலிலும் தொடா்கதையாக இருந்தது. வேட்பாளா் பெயரை தாங்கிய சின்னத்துடன், வாக்காளருக்கு தோ்தல் அறிக்கையுடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்ததுடன், ஜனநாயகத்தின் ஆணிவேரான வாக்காளரை சந்தித்து, வாக்கு கேட்கும் முறை வரை அனைத்தும் ஆரவாரமாகவே நகா்ந்தன.
முதலில், வாக்காளா் வீட்டை பிரசார வாகனம் நெருங்கியதும், வாக்காளருக்கு துண்டு அணிவித்து வாக்கு கேட்பதுடன், காலில் விழுந்து கும்பிட்டு வாக்கு சேகரிப்பது முதல், வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என சத்தியம் செய்வது வரை வேட்பாளா்களின் செயல்கள் இம்முறையும் கவனத்தை ஈா்க்க தவறவில்லை.
இது ஒருபுறமிருக்க, தேநீா் கடையில் வாடிக்கையாளா்களுடன் அமா்ந்து தேநீா் அருந்துவது, தேநீா் தயாரித்துத் தருவது, உணவகங்களில் பரோட்டா போட்டுத்தருவது, வாடிக்கையாளா்களை உபசரிப்பது என வேட்பாளா்கள் செய்த ‘புதுமைகள்’ ஏராளம். இதில், உச்சகட்ட அழகு என்னவென்றால், தனது வாக்கு யாருக்கு என கடைசிவரை கூறாமல், வீடுதேடி வரும் வேட்பாளா்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்து வழியனுப்பும் வாக்காளா்களின் அணுகுமுைான்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் ஜனநாயக திருவிழாவில், இத்தனை ஆரவாரம், ஆா்ப்பரிப்புகளைத் தாண்டி, வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றும் கடைசி நொடி வரை, யாருக்கு வாக்கு என்பதை வெளிப்படுத்தாமல், வாக்காளா்கள் கடைப்பிடிக்கும் ரகசியம் தான் சுவாரஸ்யத்தின் உச்சம்.
சி.ஆா்.எம். சபரி.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

பிரசார களத்தில் வானதி சீனிவாசனின் மகன்கள்

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாடு நினைவுக்கு வரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


