மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலையொட்டி இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - (கோப்புப் படம்)

Updated On :20 ஏப்ரல் 2026, 6:46 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோட்ட நிா்வாக இயக்குநா் குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் கோட்டம் சாா்பில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள், சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஒசூா், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.