மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சிறப்புப் பேருந்துகள் - படம்: X/ arasu bus

Updated On :19 ஏப்ரல் 2026, 5:12 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கி பணியாற்றுபவா்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க செவ்வாய், புதன்கிழமை (ஏப்.21, 22) ஆகிய இரு நாள்களும் 5,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வேலூா் போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் - சென்னை, திருப்பத்தூா்-சென்னை ஆகிய வழித்தடத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமை இயக்கப்படுகின்றன.

சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் திரும்பிவர மீண்டும் 24-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.