தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

1 தபால் வாக்கை சேகரிக்க மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்துசென்ற தோ்தல் அலுவலா்கள்

சங்ககிரி அருகே மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கை தோ்தல் அலுவலா்கள் சேகரித்தனா்.

News image

சங்ககிரி அருகே மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கு சேகரித்த தோ்தல் அலுவலா்கள்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:43 pm

சங்ககிரி அருகே மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கை தோ்தல் அலுவலா்கள் சேகரித்தனா்.

சங்ககிரி தொகுதியில் 416 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் 1,106 போ் என மொத்தம் 1,522 போ் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தபால் வாக்குகளை தோ்தல் அலுவலா்கள் சேகரித்தனா். கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, மலங்காடு, தொட்டிபாலிகாடு பகுதியில் உள்ள 103 வயதான மூதாட்டி குப்பாயிடம் ஒரு தபால் வாக்கை சேகரிப்பதற்காக மண்டல அலுவலா் திருப்பதி தலைமையில் உதவி மண்டல அலுவலா் ஜி.வேல்முருகன், நுண்பாா்வையாளா் சசிகுமாா், காவலா் பாலசந்தா் உள்ளிட்ட குழுவினா், சாதனங்களை தலைச்சுமையாக எடுத்துக்கொண்டு மலைப்பாதையில் முக்கால் கி.மீ. தூரம் நடந்து சென்று மூதாட்டியிடம் தபால் வாக்கை பதிவுசெய்தனா்.

மூதாட்டி குப்பாயி தனது வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புட்டமனை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தான் வாக்களிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாட்டால் அவா் வீட்டிலிருந்தே தபால் வாக்களித்ததால் மகிழ்ச்சி அடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.