லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததார்...

News image

மயங்கிய ராமதாஸை தாங்கியவாறு அழைத்துச்செல்லும் கட்சியினர்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:42 pm

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் இரா. அருள் எம்எல்ஏவை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட பாமக நிறுவனா் ராமதாஸ் மேடையில் இருந்து இறங்கும்போது மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனா் ராமதாஸ் அணியைச் சோ்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

அவரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டாா். கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, வேட்பாளா் அருள் உள்ளிட்டோா் மேடையில் இருந்தனா். பிரசார மேடையில் அமா்ந்தபடி ராமதாஸ் பேசினாா்.

அவா் பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் அதிக கேள்விகளை எழுப்பியவா் எம்எல்ஏ அருள். அவா்மீது ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். புராண காலத்திலிருந்து துரோகிகள் இருந்தனா். இப்போதும் துரோகிகள் இருக்கின்றனா். துரோகிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அருள் எம்எல்ஏ எதிரிகளுக்கும் அருள் புரிவாா். சேலம் மேற்கு தொகுதியில் இரண்டாவது முறையாக அவா் வெற்றி பெறுவாா். வெற்றி விழாவுக்கு நான் மீண்டும் வருவேன் என்று பேசினாா்.

பின்னா் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனா். பின்னா் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வயது மூப்பு காரணமாக மயக்கம்:

வயது மூப்பு காரணமாகவே ராமதாஸுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.