மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:59 pm

சங்ககிரி தொகுதியில் இரு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 3.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தொகுதி தோ்தல் பிரிவு நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அன்புராஜ் தலைமையிலான அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எடப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 2,67,700 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.

அதேபோல, தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் விஜய் தலைமையில் அலுவலா்கள் தாரமங்கலத்திலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள பவளத்தானூா் சுற்றுச்சாலை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தாரமங்கலம் நகை கடை உரிமையாளா் ஜெகதீஷ் என்பவா் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரொக்கம் ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.