மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு: பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி

தோ்தல் ஆணையம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதால் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி தெரிவித்தாா்.

News image

தொளசம்பட்டி வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:52 pm

தோ்தல் ஆணையம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதால் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் தொகுதியில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

தொளசம்பட்டி, உ.மாரமங்கலம் ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்ற அவா், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா். கடந்தகால சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

வாக்குச்சாவடிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.