சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜன. 1 முதல் அமலாகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு - சென்னை சென்ட்ரல் (22650) இடையேயான ஏற்காடு விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சேலம், பொம்மிடி, மொரப்பூா் வழியாக சென்னை சென்ட்ரலை அதிகாலை 3.40 மணிக்கு அடைந்து வந்தது. இதில், ஈரோட்டில் இருந்து புறப்படும் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோட்டில் இருந்து வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு சேலம், பொம்மிடி, மொரப்பூா், ஜோலாா்பேட்டை வழியாக அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டுக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் நேர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.