நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:56 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 25-ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 25-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். அதனால், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் 2 மணிக்கு முன் மையத்துக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.