டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உலக சுகாதார தினம்: வாழப்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:55 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடி வட்டார சுகாதாரத் துறை சார்பில், பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக சுகாதார தின விழா  நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி இரு அரசு சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். 

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுகாதாரத்தை பேணி காக்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உறுதி ஏற்றனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.