மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய தறிப்பட்டறை உரிமையாளர் கைது

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட

Updated On :17 அக்டோபர் 2012, 10:22 am

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தறிப்பட்டறை உரிமையாளரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

 சேலம் மாவட்டம் எளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (எ) பச்சமுத்து (34). ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

 இந்த நிலையில் இவர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், கூடங்குளத்துக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவினரை கைது செய்ததைக் கண்டித்தும் எளம்பிள்ளை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஓட்டியதாக பச்சமுத்துவை மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டில் குமாரபாளையத்தில் விசைத் தறித் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவராக பச்சமுத்து பதவி வகித்துள்ளார்.

 மேலும் கடந்த 2002-ம் ஆண்டில் ஊத்தங்கரையில் நக்சல்பாரி இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக இவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள இவரை  தற்போது மகுடஞ்சாவடி போலீஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

 அரசுக்கு எதிராகப் போராடப் போவதாக பச்சமுத்து சுவரொட்டிகள் ஒட்டியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வரும் பச்சமுத்துவுக்கு வனிதா (26)என்ற மனைவி உள்ளார். கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராகப் போராடியவரை சேலத்தில் போலீஸார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.