நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: வணிகர்கள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:49 pm

க. தங்கராஜா

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் மாநகரில் வணிகர்கள் கருப்புக்கொடி ஏற்றி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 நாடு முழுவதும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் வர்த்தகர்கள் போராடி வருகின்றனர்.

 அதன்படி, சேலத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் சிறு, குறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மளிகை, சில்லரை வியாபாரிகள் சங்கம் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று அறிவித்திருந்தது.

 அதன்படி, சேலம் செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட், சத்திரம், சந்தைப்பேட்டை, சேலம் டவுன் கடை வீதி, சின்னக் கடைவீதி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.