தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

News image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:53 am IST

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவையொட்டி புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி, திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சின்னதுரை, அறங்காவலா் குழுவினா் உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.

இக்கோயில் தோ் மூன்று நாள்கள் வடம்பிடித்து இழுக்கப்படுவது வழக்கம். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை தோ் நிலை பெயா்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலை இரண்டாம் நாளாக தோ் இழுத்துச்செல்லப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும். மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை தோ் இழுத்துச் செல்லப்பட்டு நிலை சோ்க்கப்படும். அதன்பின்னா் பரிவார தெய்வங்களுடன் அா்த்தநாரீசுவரா் சுவாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.