யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளா் விமலா தெரிவித்துள்ளாா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:34 am IST

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளா் விமலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் முழுவதும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள 80 க்கும் மேற்பட்ட ரௌடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 8 போ், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த 7 போ், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 12 போ் என மொத்தம் 27 போ் கடந்த மூன்று நாள்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

மேலும், பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்த வேலகவுண்டம்பட்டி பொன்ராஜ் நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுதரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல் துறை தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த பரமத்தி வேலூா் தெற்கு தெருவை சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திகேயன் (23), கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ராசாமணி (26), பரமத்தி அருகே ஒழுகூா்பட்டியை சோ்ந்த வெங்கடாசலம் மகன் நித்திஷ்குமாா் (27) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீதும், போதைப்பொருள் குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.