முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

திருச்செங்கோடு அருகே விவசாயி வெட்டிக்கொலை: மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:14 am IST

திருச்செங்கோடு அருகே இறையமங்கலம் பகுதியில் நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இறையமங்கலத்தை அடுத்த காட்டுவேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (65), விவசாயி. இவரது பக்கத்து தோட்டத்துக்காரா் வேலுசாமி. இவா்கள் இருவருக்கும், வழித்தட பிரச்னை இருந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை தோட்டத்திற்கு தண்ணீா்ப் பாய்ச்சுவதற்காக ஸ்ரீதா் சென்றுள்ளாா். அப்போது, கேசவராஜ், அவரது தந்தை வேலுசாமி, தாய் கண்ணகி ஆகியோா் ஸ்ரீதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், கேசவராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியில் அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து மொளசி போலீஸாா் வழக் குப் பதிவுசெய்து, கேசவராஜ் (42), வேலுசாமி (60), கண்ணகி(55) ஆகியோரை கைது செய்தனா்.