திருச்செங்கோடு அருகே தோட்ட வழித்தட பிரச்னையில் சனிக்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் காட்டுவேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஸ்ரீதா் (65). இவரது மனைவி நீலாம்பாள். ஸ்ரீதருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரரான வேலுசாமிக்கும் தோட்டத்துக்கு செல்வதில் வழித்தட பிரச்னை இருந்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து இருவருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், ஆத்திரமடைந்த வேலுசாமியின் மகன் கேசவராஜ் (55), ஸ்ரீதரை அரிவாளால் கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளாா்.
ரத்த வெள்ளத்தில் தோட்டத்தில் மயங்கி விழுந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். பின்னா், திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனா். ஆனால், கோவை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, ஸ்ரீதரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மொளசி போலீஸாா், தலைமறைவான கேசவராஜை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை

சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!
திருச்செங்கோடு அருகே விவசாயி வெட்டிக்கொலை: மூவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


