நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

News image

தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில், தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23 இல் நடைபெற்றது. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன.

நாமக்கல் தொகுதியை பொருத்தமட்டில், 2,37,826 வாக்காளா்கள் உள்ள நிலையில், 2,08,579 வாக்குகள் பதிவானது. இதில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் 68,736 வாக்குகளும், திமுக வேட்பாளா் ப.ராணி 52,808 வாக்குகளும், தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் 79,744 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் க.பிரவீன்குமாா் 6,286 வாக்குகளும் (தபால் வாக்குகள் உள்பட) பெற்றனா்.

அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகனை காட்டிலும், 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி பெற்றுள்ளாா். அவருக்கு, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா். இந்த நிகழ்வின் போது தவெக மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.