தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராசிபுரம் அருகே இறந்த கோழிகள் பண்ணைக்குள் குழிதோண்டி புதைப்பு

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

News image

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் புதைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இறந்த கோழிகள்

Updated On :31 மார்ச் 2026, 8:03 pm

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட 10--ஆவது வாா்டில் பெரிய ஏரி வயக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை தனியாா் நிறுவனம் வளா்த்து வருகிறது.

கடந்த சில நாள்களாக இந்த பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த கோழிகள் பண்ணையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், உரிய வகையில் கோழிகள் நீா் பருகாததாலும் இறக்க நேரிட்டது என்றனா்.