லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீ ராமநவமி: சாய்தத்தா பிருந்தாவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீ ராமநவமியையொட்டி, நாமக்கல் ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் சந்தனக் காப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

Updated On :26 மார்ச் 2026, 9:53 pm

ஸ்ரீ ராமநவமியையொட்டி, நாமக்கல் ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் சந்தனக் காப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு பெருமாள், கிருஷ்ணா், ஆஞ்சனேயா், ராமா், சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் - திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்தத்தா பிருந்தாவனில் ஸ்ரீ ராமநவமி சந்தனக் காப்பு (உரூஸ்) திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை காகடா ஆரத்தி, கொடியேற்றம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மங்கள ஆரத்தி, அனுமன் சாலீசா பாராயணம், சந்தனக் காப்பு, மாலை, இரவு ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய் ஹா்ஷா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.