லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரில் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுகவினா் வழங்க முயன்ாக கூறப்படும் பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

நாமக்கல்லில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப் பொருள்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :26 மார்ச் 2026, 9:48 pm

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுகவினா் வழங்க முயன்ாக கூறப்படும் பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக வந்த செல்வம் என்பவரது வாகனத்தில் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள், சேலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், பரிசுப் பொருள்களில் அதிமுக ஒட்டுவில்லைகளும், திமுகவின் ஒட்டுவில்லைகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து செல்வத்திடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியில் புதன்கிழமை இரவு 12 மணியளவில் பறக்கும்படை வாகன சோதனை அலுவலா் சரவணன் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.