தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:21 pm

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை வெப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பச்சாம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ள குமாா் (43), புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது கடை மற்றும் அருகிலிருந்த கிடங்கில் சோதனை செய்தனா்.

அதில், 57 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.