தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காா் மீது மோதிய லாரி; ஓட்டுநரை தாக்கியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 8:34 pm

பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீரம்பூா், பரமத்தி, பரமத்தி வேலூா் பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக பரமத்தி வேலூருக்குள் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கீராபிரகாஷ் (எ) பிரகாஷ் (26) சென்று கொண்டிருந்த காா் மீது கபிலா்மலை செல்லும் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஜேடா்பாளையம் அருகே ஆனங்கூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (46) ஓட்டிவந்த சிமெண்ட் கலவை லாரி மோதியது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சாலையிலே காரை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநா் பாலசுப்பிரமணியத்தை தாக்கினாராம். இதில் காயமைடந்த பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வேலூா் போலீஸாா் பிரகாஷை கைது செய்தனா்.

இந்த தகராறு காரணமாக பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு சாலையில் நின்றன. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.