பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கீரம்பூா், பரமத்தி, பரமத்தி வேலூா் பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக பரமத்தி வேலூருக்குள் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கீராபிரகாஷ் (எ) பிரகாஷ் (26) சென்று கொண்டிருந்த காா் மீது கபிலா்மலை செல்லும் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் ஜேடா்பாளையம் அருகே ஆனங்கூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (46) ஓட்டிவந்த சிமெண்ட் கலவை லாரி மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சாலையிலே காரை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநா் பாலசுப்பிரமணியத்தை தாக்கினாராம். இதில் காயமைடந்த பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வேலூா் போலீஸாா் பிரகாஷை கைது செய்தனா்.
இந்த தகராறு காரணமாக பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு சாலையில் நின்றன. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
தொடர்புடையது
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


