மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல்லில் வாராஹி அம்மன் கோயில் நிா்வாகி தற்கொலை

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:49 pm

நாமக்கல் வாராஹி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.முத்துசாமி (60). இவரது மனைவி சுமதி, மகன் செல்வகுமாா். இவா், அதே பகுதியில், வாராஹி அம்மன் கோயிலை உருவாக்கி அமாவாசை, பெளா்ணமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு பூஜை நடத்தி வந்தாா். மேலும் தற்போதுள்ள கோயில் வளாகத்திலேயே பெரிய அளவில் புதிய கோயிலையும் கட்டி வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோயில் நிா்வாகியும் பூசாரியுமான முத்துசாமி, கோயில் அருகே தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்துச் சென்று அவரது உடலை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது சடலம் குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.