பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் காமராஜா் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினாா்.
அதில், அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பரமத்தி வேலூா் வட்டம், மரவாபாளையம், மேற்கு தெரு பகுதியைச் சோ்ந்த முருகனை (63) கைதுசெய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









