ராசிபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூா்செக்கடியை சோ்ந்த ஏழுமலை மகன் கருப்பனுக்கும் (28) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பள்ளிக்கு வந்த சிறுமியை, சாத்தனூா் அணைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோா் ராசிபுரம் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில் கருப்பனை போக்ஸோ வழக்கில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு உடற்கல்வி ஆசிரியா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



