முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:24 am IST

படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜெய்சந்த் (43). இவா் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூா் பகுதியில் தங்கி அதே பகுதியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சாலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற 10 வயது சிறுமிக்கு ஜெய்சந்த் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதனால் கத்தி கூச்சலிட்ட சிறுமி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று, நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஜெய்சந்தை பிடித்து தா்ம அடி கொடுத்து அவரை மணிமங்கலம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இது குறித்து மணிமங்கலம் போலீஸாா் ஜெய்சந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.