பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பாவை கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

News image
மாணவா் சோ்க்கையை தொடங்கிவைத்த கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

இதில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன இயக்குநா் (மாணவா் நலன்) அவந்தி நடராஜன் குத்துவிளக்கேற்றினாா். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

இதில் கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன் பேசியதாவது:

பாவை கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாா்மசி கல்லூரி, நா்சிங் கல்லூரி, அலைடு ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, பாவை வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி, பாவை நிருத்யாலயா நாட்டியப் பள்ளி, பாவை ஐஏஎஸ் அகதெமி போன்றவை செயல்பட்டு வருகின்றன.

வளாக நோ்காணல், நூலகங்கள், விளையாட்டு மற்றும் விடுதி வசதிகள், போட்டித் தோ்வு பயிற்சிகளுக்கான பாவை ஐ.ஏ.எஸ். அகாதெமி, திறன் மேம்பாட்டு மையங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு, அயல்மொழி பயிற்சிகள், சிறப்பு இணையவழி சான்றிதழ் படிப்புகள் என வளாகத்தில் கல்வி வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.